ADDED : செப் 01, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சித்தோடு அருகே ஆவின் பால்பண்ணை பகுதியை சேர்ந்த லோகநாதன் மகள் காவியஸ்ரீ, 20; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 28ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், தந்தை லோகநாதன் சித்தோடு போலீசில் நேற்று புகாரளித்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.