ADDED : பிப் 15, 2025 05:58 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பகுதியில், இரைதேடி வரும் மயில்-களால், பயிர்கள் நாசமாவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்-துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் புன்-செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, ஆலாம்பாளையம் பகுதி-களில், சோளம், கம்பு, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த, பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இரை தேடி வரு-கின்றன. சோளம், கம்பு மற்றும் செடிகளில் பழுத்த மிளகாய்-களை தின்கின்றன. சில மயில்கள் வழிதடுமாறி முட்கள் நிறைந்திருக்கும் பகுதி-களில் நிழலுக்கு நுழைந்து விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. இப்பிரச்னை தொடர்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தும், தேசிய பறவை என்பதால் நடவ-டிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். இதனால் மயில்-களை கட்டுப்படுத்தவோ, பயிர் சேதத்தையோ தடுக்க முடிய-வில்லை. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.