sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 1.2 டன் ரேஷன் அரிசி  சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்

/

 1.2 டன் ரேஷன் அரிசி  சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்

 1.2 டன் ரேஷன் அரிசி  சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்

 1.2 டன் ரேஷன் அரிசி  சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்


ADDED : மார் 12, 2025 12:46 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ.,க்கள் குப்புராஜ், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நல்லுார் - கூலிபாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி காரை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் 1,230 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதில் வந்த ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 36, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், கூலிபாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்ததும், அதனை வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனைசெய்வதும் தெரிந்தது.

அலெக்ஸ் பாண்டியனை கைது செய்த போலீசார், அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us