sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்

/

31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்

31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்

31 அரசு உதவி பெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்


ADDED : ஜூலை 15, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 31 அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.

தமிழக அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், முதல்கட்டமாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 77 அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக, 251 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட, 797 பள்ளிகள், 14 பேரூராட்சிகளில், 95 பள்ளிகள், ஆறு நகராட்சிகளில், 59 பள்ளிகள்; மாநகராட்சியில் உள்ள, 120 பள்ளிகள் என,1,081 பள்ளிகளில் பயிலும், 75 ஆயிரத்து, 482 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

மூன்றாம் கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 31 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,742 மாணவ, மாணவியருக்கும் நேற்று முதல் சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

திங்கள் - சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார். செவ்வாய் - ரவா கிச்சடி. புதன் - வெண் பொங்கல், சாம்பார். வியாழன் - சேமியா உப்புமா, சாம்பார். வெள்ளி - கோதுமை ரவா கிச்சடி, ரவா கேசரி வழங்கப்பட உள்ளது.

உடுமலை ஒன்றியம், குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள, ஆர்.வி.ஜி., அரசு உதவி பெறும் பள்ளியில், இத்திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன்,காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் மற்றும் அமைச்சர் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி பறிமாறினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஒன்றிய தலைவர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us