/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலை பொருள் விற்ற 358 கடைகள் ஒரு கோடியை நெருங்கிய அபராத வசூல்
/
புகையிலை பொருள் விற்ற 358 கடைகள் ஒரு கோடியை நெருங்கிய அபராத வசூல்
புகையிலை பொருள் விற்ற 358 கடைகள் ஒரு கோடியை நெருங்கிய அபராத வசூல்
புகையிலை பொருள் விற்ற 358 கடைகள் ஒரு கோடியை நெருங்கிய அபராத வசூல்
ADDED : ஆக 30, 2024 10:58 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
தொடர் ஆய்வுகள் நடத்தியும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அளிக்கும் புகாரின் பேரிலும், திருப்பூர் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்துவருகிறோம். கடந்த ஜூன் முதல் நடப்பு ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில், மொத்தம் 3893 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 358 கடைகள் பிடிபட்டுள்ளன; 2 ஆயிரத்து 893 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 99.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குட்கா விற்பனை செய்வது தெரிந்தால், 94440 42322 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு அல்லது TN Food Safety Consumer App செயலியில் புகார் அளிக்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.