/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயியை தாக்கிய சிறுவன் உட்பட 4 பேர் கைது
/
விவசாயியை தாக்கிய சிறுவன் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2024 12:13 AM
பொங்கலுார்;பொங்கலுார் ஒன்றியம், பெருந்தொழுவு - கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தின் அசல் பத்திரத்தை கணேஷ் என்பவரிடம் பத்து லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.
நடராஜூக்கு தெரியாமல், கணேஷ் பல்லடத்தைச் சேர்ந்த முருகையன் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்து விட்டார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக, ஏப்., மாதம் நடராஜனை, முருகையன் மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், ஆயுதத்தால் தாக்கி சென்னிமலைக்கு காரில் துாக்கிச் சென்று தனியார் விடுதியில் அடைத்து வைத்தனர்.
அங்கிருந்து தப்பி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவிநாசிபாளையம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
அதில், ஈரோடு ரங்கபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 27, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சூரம்பட்டியை சேர்ந்த ராகவன், 26, சுதர்சன், 22 ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.