sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முகமூடி கும்பல் 9 பேர் கைது; அரிவாள்-பட்டாகத்தி பறிமுதல்

/

முகமூடி கும்பல் 9 பேர் கைது; அரிவாள்-பட்டாகத்தி பறிமுதல்

முகமூடி கும்பல் 9 பேர் கைது; அரிவாள்-பட்டாகத்தி பறிமுதல்

முகமூடி கும்பல் 9 பேர் கைது; அரிவாள்-பட்டாகத்தி பறிமுதல்


ADDED : பிப் 26, 2025 04:29 AM

Google News

ADDED : பிப் 26, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் பழைய வழக்குகளில் தொடர்புடையவர்களை தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டிபாளையம் - மங்கலம் ரோட்டில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, குற்றத்தில் ஈடுபட திட்டமிட்டு காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது குறித்து தெரிந்தது.

கண்காணித்த போலீசார், கருப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில், கைகளில் அரிவாள், இரும்பு கம்பி, கட்டைகளுடன் இருந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 22, பாலாஜி நகரை சேர்ந்த மணிகண்டன், 23, வீரபாண்டியை சேர்ந்த கவுதம், 23, சலவை பட்டறையை சேர்ந்த ரகுராம், 20, ஜெயராம், 26 மற்றும் சூர்யபிரகாஷ், 23 என்பது தெரிந்தது. ஆறு பேரும், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டது தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்தனர்.

தலை துண்டித்து கொலை வழக்கு


அதேபோல், கொலை உள்ளிட்ட பல வழக்கில் தொடர்புடைய திருமுருகன்பூண்டியை சேர்ந்த ராம்குமார், 28, காலேஜ் ரோட்டை சேர்ந்த பாலாஜி சரவணன், 28 மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 28 என, மூன்று பேரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.

கடந்த, மூன்று ஆண்டுக்கு முன், போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு உட்பட ஏராளமான வழக்கு உள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us