ADDED : ஆக 15, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.
ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் கொமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

