/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறவைகளுக்கு புகலிடமாக உருவாகும் பழ மரக்காடு
/
பறவைகளுக்கு புகலிடமாக உருவாகும் பழ மரக்காடு
ADDED : செப் 13, 2024 11:56 PM

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், தாராபுரம் அடுத்துள்ள காளிபாளையத்தில், 1,517 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வெற்றி' அமைப்பின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், நடப்பு ஆண்டு, மூன்று லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து, 44 ஆயிரத்து, 383 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.
தாராபுரம் அருகே உள்ள, காளிபாளையம் தண்டபாணிக்கு சொந்தமான தோட்டத்தில், நேற்று 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நடப்பட்டது.
மகோகனி -550, வேம்பு -100, செம்மரம் -100, தேக்கு -100, சந்தனம் -20, இலுப்பை -10, புங்கன் -5, நாவல் -5, கொடுக்காப்புளி -5, புளி- 5, காயா -200, முள் சீத்தா -10, நெல்லி -50, ஈட்டி -5, கொய்யா -125, எலுமிச்சை -50, சாத்துக்குடி -25, மா -100, பலா -55 என, 1,517 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில்தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

