sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நடமாடும்' உணவு பாதுகாப்பு துறை? அலுவலகம் இல்லாத அவலம்

/

'நடமாடும்' உணவு பாதுகாப்பு துறை? அலுவலகம் இல்லாத அவலம்

'நடமாடும்' உணவு பாதுகாப்பு துறை? அலுவலகம் இல்லாத அவலம்

'நடமாடும்' உணவு பாதுகாப்பு துறை? அலுவலகம் இல்லாத அவலம்


ADDED : ஜூலை 05, 2024 03:12 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடத்தில், கடந்த ஒரு ஆண்டாக உணவு பாதுகாப்பு துறைக்கு அலுவலகமே இல்லாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது

உணவுப் பொருட்களில் கலப்படம், கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கூடுதல் விலை வைத்து வைப்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு, உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவதால், நுகர்வோர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருப்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இருக்க, பல்லடத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலகமே இல்லாமல் கடந்த ஒரு ஆண்டாக இயங்கி வருகிறது.

நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கூறியதாவது:

பொதுமக்கள், அதிகாரிகளை எளிதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வசதியாக உணவு பாதுகாப்பு அலுவலகம் செயல்பட வேண்டும். ஆனால், பல்லடத்தில் நடமாடும் அலுவலகமாக உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது.

ஆனால், 6 லட்சம் மக்கள் வசிக்கும் பல்லடத்தில், ஒரே ஒரு வட்டார அலுவலர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும், அலுவலகமோ, உதவியாளர்களோ கிடையாது. பல்லடத்தில் எத்தனையோ அரசு நிலங்கள், கட்டடங்கள், கடைகள் இருக்க, அலுவலகமே இல்லாமல் இயங்கி வருகிறது உணவு பாதுகாப்பு துறை.

இதில், எவ்வாறு தரமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உணவு பாதுகாப்புத் துறை உறுதி செய்ய முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு பல்லடத்தில் அலுவலகம் அமைக்கவும், மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us