sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பள்ளி மேலாண்மை புதிய குழு அமைகிறது

/

பள்ளி மேலாண்மை புதிய குழு அமைகிறது

பள்ளி மேலாண்மை புதிய குழு அமைகிறது

பள்ளி மேலாண்மை புதிய குழு அமைகிறது


ADDED : ஜூலை 06, 2024 10:22 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அரசு பள்ளியில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய, 20 உறுப்பினர்களை கொண்ட எஸ்.எம்.சி., (பள்ளி மேலாண்மை குழு) செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை இக்குழு கூட்டம் நடக்கும்.

பள்ளியில் கற்றல், கற்பித்தல், மாணவர் சேர்க்கை, மேலாண்மை உள்ளிட்ட பணி தொடர்பாக விவாதிக்கப்படும். கடைசியாக, இக்குழு கடந்த, 2022ல் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. ஜூலையுடன் பள்ளிகளில் தற்போதுள்ள குழுவின் பதவிக்காலம் முடிகிறது.

இதனால், 2024 - 2026ம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழுவுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராகவும், தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட வேண்டும். பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம், 24 பேர் குழுவில் இடம் பெற வேண்டும்.

இதில், 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில், 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பள்ளி தலைமை ஆசிரியர் உறுப்பினரை தேர்வு செய்யும் அலுவலராக செயல்பட வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு ஜூலை இறுதி அல்லது ஆக., துவக்கத்துக்கு முன்பாக பள்ளிகளில் புதிய மேலாண்மை குழுக்கள் அமையும்.






      Dinamalar
      Follow us