sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்

/

தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்

தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்

தொழிலின் நிலையை விளக்கும் குறும்படம்; விசைத்தறி கூட்டமைப்பு தீர்மானம்


ADDED : ஆக 16, 2024 12:09 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு ஆலோசனைக் கூட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு தேவைப்படும் சீருடை, இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை விசைத்தறிகள் மூலமாக மட்டுமே தயாரித்து வழங்கிட அரசை அணுகி தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். சோலார் மின்சாரம் பெரிய அளவில் உற்பத்தி செய்து விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும். தொழிலின் தற்போதைய நிலை குறித்து குறும்படம் ஒன்றை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அதை அனுப்பி வைத்து, எந்த அளவு தொழிலில் பாதிப்புகள் உள்ளது என்பதை விளக்க வேண்டும். மத்திய அரசின் 'பவர் டெக்ஸ் இந்தியா' திட்டத்தை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். விசைத்தறிகளுக்கு என, தனியாக ஒதுக்கீடு வழங்குவதுடன், தறிகளை நவீனப்படுத்துவதற்காக, மத்திய அரசு, 50 சதவீதமும், மாநில அரசு, 50 சதவீதமும் மானியம் வழங்க வேண்டும். மொத்தத்தில், அழிவுப் பாதையில் இருந்து தொழிலை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டமைப்பு சார்பில், மாநில, மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிர மணியம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us