/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் படியில் பயணம் வாலிபர் பரிதாப பலி
/
பஸ் படியில் பயணம் வாலிபர் பரிதாப பலி
ADDED : ஆக 13, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகரை சேர்ந்தவர் அழகுமுத்து, 27; பனியன் தொழிலாளி. பாளையகாட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்ல தனியார் பஸ்சில் ஏறினார்.
உள்ளே செல்லாமல், படிக்கட்டில் நின்ற படி சென்ற போது, பாளையக்காடு ரவுண்டானாவில் பஸ் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

