/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விதைப் பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம்'
/
'விதைப் பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம்'
ADDED : செப் 10, 2024 02:31 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில், கூடுதல் இலாபம் பெற்று பயனடைய, வேளாண்மைத்துறையில் விதைப்பண்ணையாக பதிவு செய்யலாம். களப்பணியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் தொடர் கண்காணிப்புடன் உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் வாயிலாக, சராசரியாக பெறும் மகசூலை காட்டிலும், கூடுதலாக மகசூல் ஈட்ட முடியும். மேலும், விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு, சந்தை விலையை விட கூடுதலாக விலை கிடைக்கும். அரசு 'டான்சிடா' வாயிலாக, கொள்முதல் விலை பெற முடியும்; விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
நடப்பாண்டில், விதைப்பண்ணை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெல், சிறுதானியம், பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்துக்கள் மூலம் விதைப்பண்ணை அமைக்க ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம்,
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.