/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை
/
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு: 237 மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஜூன் 11, 2024 12:14 AM

உடுமலை;உடுமலை அரசு கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 237 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2024 - 25ம் ஆண்டுக்காக, இளநிலை பாடப்பிரிவுகளிலுள்ள, 864 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதற்கட்ட பொது கலந்தாய்வு நேற்று நடந்தது.
மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியலில், ஒன்று முதல், 2 ஆயிரம் வரை இடங்களை பெற்றிருந்த மாணவர்கள், இக்கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இதில், வேதியியல் பாடப்பிரிவில், 10 மாணவர்களும், தாவரவியல் - 1, கணிதவியல் - 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 14, அரசியல் அறிவியல் - 13, புள்ளியியல் - 5, பொருளியல் - 7, பி.காம்., - 51, பி.காம்., (சி.ஏ.,) - 71, பி.காம்., ( இ.காம்.,) 24, பி.பி.ஏ., பாடப்பிரிவில் 31 மாணவர்களும் என மொத்தம், 237 மாணவர்கள் கல்லுாரியில் சேர்ந்தனர்.
இன்று, தரவரிசை பட்டியலில், 2,001முதல், 4,000 வரையிலான இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.
மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், பெற்றோருடன், 10 ஆம் வகுப்பு, பிளஸ் -1 , பிளஸ் - 2, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ் , மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் மூன்று நகல்கள் உடன் பங்கேற்க வேண்டும்.
மேலும், உரிய கல்விக்கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் , மாணவரின் தரவரிசை இடம் பெற்ற கல்லுாரி இணையதளப்பக்கத்தின் நகல் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு கல்லுாரியின் இணையதளத்தை பார்கவும் என, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.