sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொன் விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலைப்பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க முயற்சி

/

பொன் விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலைப்பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க முயற்சி

பொன் விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலைப்பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க முயற்சி

பொன் விழாவுக்கு தயாராகும் அமராவதி முதலைப்பண்ணை சுற்றுலா முக்கியத்துவம் அதிகரிக்க முயற்சி


ADDED : மே 28, 2024 12:43 AM

Google News

ADDED : மே 28, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'பொன் விழாவுக்கு தயாராகி கொண்டிருக்கும் அமராவதி முதலைப் பண்ணையை மேம்படுத்த, சுற்றுலா துறையும் கை கோர்க்க தயாராக உள்ளது' என, மாவட்ட சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி நகர் முதலை பண்ணை, 12 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது. கடந்த, 49 ஆண்டுகளாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பண்ணை, பொன் விழாவுக்கு தயாராகி வருகிறது. வனத்துறை சார்பில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பண்ணையை பார்வையிட்டார். முதலைப் பண்ணை வளாகத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா, தோட்டம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டனர்.

காட்டுபதி சூழல் மேம்பாட்டு குழுவினர் நடத்தும் சூழல் கடையையும் பார்வையிட்டார். வனக்காப்பாளர் அன்னபூரணி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் பிரசாத், ராம் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வின் போது, வனத்துறையினர் கூறுகையில், 'அமராவதி அணையை காண வரும் சுற்றுலா பயணிகள், முதலை பண் ணையையும் பார்க்க வருகின்றனர். முதலைகளை கண்டு வியக்கும் மக்களுக்கு அவற்றின் வாழ்வியல் சூழலை விளக்கும் வகையிலான, முழு தகவல்களும் இடம் பெற்றுள்ளன. சுமார், 80 முதலைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன,' என்றனர்.

'முதலை பண்ணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையிலான, சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு சார்ந்து பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால், அதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை, சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வையுங்கள்' என, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், வனத்துறை அலுவலர்களிடம் கூறினார். பின், சுற்றுலா பயணிகளிடம் கருத்து கேட்டார்.






      Dinamalar
      Follow us