sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: 'விரைவில்' என்கிறார் கலெக்டர்

/

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: 'விரைவில்' என்கிறார் கலெக்டர்

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: 'விரைவில்' என்கிறார் கலெக்டர்

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி: 'விரைவில்' என்கிறார் கலெக்டர்


ADDED : செப் 12, 2024 12:32 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

ஆண்டிபாளையம் குளம் படகு இல்லம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 1.47 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடிவடைந்து, சவாரி செல்வதற்காக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டி பாளையம் குளத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:

ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணிகள், 99 சதவீதம் முடிவடைந்துவிட்டன.

படகு சவாரி, நீர் விளையாட்டுக்கள், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா, உணவகம், சிற்றுண்டி கடை, டிக்கெட் வழங்கும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு, கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட அம்சங்களுடன் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

திருப்பூர் மக்களுக்கு ஆண்டிபாளையம் குளம் சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us