/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 8ல் கலை இலக்கிய போட்டிகள்
/
வரும் 8ல் கலை இலக்கிய போட்டிகள்
ADDED : செப் 04, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், வரும், 8ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'நான் கண்ட பாரதி' என்ற தலைப்பிலும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'பாரதியின் மனிதம்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'பாரதியும், பாரதமும்' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
கவிதை போட்டிக்கான தலைப்பு, அன்றைய தினம் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர், 99422 77407, 70104 87745, 99943 41973 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.