sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.82.13க்கு விலை நிர்ணயம்

/

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.82.13க்கு விலை நிர்ணயம்

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.82.13க்கு விலை நிர்ணயம்

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.82.13க்கு விலை நிர்ணயம்


ADDED : மார் 21, 2024 11:05 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், அதிகபட்சமாக ஒரு கிலோ, ரூ.82.13க்கு விற்பனையானது.

உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, குறிஞ்சேரி, புக்குளம்,விளாமரத்துப்பட்டி, புங்கமுத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 9 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இ - நாம் திட்டத்தின் கீழ், 6 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.82.13 வரையும், இரண்டாம் தரம், ரூ.64.09 முதல், 75.98 வரையும் இணையதளத்தில் விலை கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.

ஒருங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:

ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.

மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us