/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்தில் ஏ.டி.எம்., அறக்கட்டளை சேவை
/
கிராமத்தில் ஏ.டி.எம்., அறக்கட்டளை சேவை
ADDED : மார் 07, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், போத்தம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள, 13 கிராமப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்காகவும், அத்தியாவசிய காலத்தில் பணம் செலுத்தவும், எடுக்கவும் அருகே உள்ள சேவூர் அல்லது அவிநாசியில் உள்ள வங்கிகளுக்கு சென்று சிரமப்பட்டு வந்தனர்.
இதனையறிந்த மக்கள் சேவகன் அறக்கட்டளை செயலாளர் ரமேஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் பங்களிப்பில், பஸ் ஸ்டாப்பில் ஏ.டி.எம்., இயந்திரம் நிறுவப்பட்டது.
இதன் துவக்க விழாவில், அறக்கட்டளை தலைவர் மூர்த்தி, உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.