ADDED : ஆக 20, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அருகே, வாளவாடியில் வீடு புகுந்து திருட முயற்சித்தவரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உடுமலை அருகேயுள்ள வாளவாடியைச்சேர்ந்த ராஜசேகர், 38. குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது.
சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் திருடனைப்பிடித்து, தளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், ஜெ.ஜெ., நகரைச்சேர்ந்த பிரவன் குமாரை, 24, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

