/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
ADDED : மார் 28, 2024 10:42 PM
உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்தது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை,புக்குளம், விளாமரத்துப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 10 விவசாயிகள், 25 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இ - நாம் திட்டத்தின் கீழ், 5 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதில், இரண்டாம் தரம், ரூ.70.80 முதல், 74.39 வரையும் இணையதளத்தில் விலை கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''விவசாய விளைபொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

