sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு

/

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு

விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் இருப்பு


ADDED : மார் 02, 2025 11:34 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; நடப்பாண்டு குளிர்கால மழை, இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, ஜன.,- பிப்., மாத குளிர் கால மழையளவு சராசரி, 14 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, இரு மாதங்களில், 14.76 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியை விட, 0.76 மி.மீ., மழை கூடுதலாக கிடைத்துள்ளது.

பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானிய விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மாவட்டத்தில், நெல் 9.90 டன், தானிய பயிறுகள், 29.52 டன், பயறு வகை பயிறுகள் 9.79 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 29.63 டன் இருப்பு உள்ளது.

மேலும், பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும் போதியளவு இருப்பு உள்ளது.

தற்போது, யூரியா 3 ஆயிரம் டன், டி.ஏ.பி., 1, 339 டன், காம்ப்ளக்ஸ் உரம், 3 ஆயிரத்து, 806 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 697 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது, என மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us