sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு

/

'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு

'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு

'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு


ADDED : ஜூலை 09, 2024 10:45 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், ஸ்மார்ட் போன் பயனாளிகள் தேர்வு முகாம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில், கண் தெரியாத, காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள், 120 பேர் பங்கேற்றனர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சாம்சாந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார், பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாத, வாய் பேசாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் ஆகியோர் குழுவினர், ஸ்மார்ட் போனுக்கான பயனாளிகளை தேர்வு செய்தனர்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடப்படுகிறது. முதல்நாளான நேற்று, ஸ்மார்ட் போன் பெறுவதற்காக வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு, குரூப் - 2 தேர்வு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

--------------------------

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 'ஸ்மார்ட் போன்' பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய முகாம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us