sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது

/

வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது

வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது

வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது


ADDED : ஜூன் 29, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்;வெள்ளகோவில், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, ஆர்.பி.எஸ்., மஹாலில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 5வது புத்தக திருவிழா, நேற்று துவங்கியது. அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், துவக்கி வைத்தார். வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் செல்வகுமார், ஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி தாளாளர் பரிமளம், புனித அமல அன்னை மெட்ரிக் தாளாளர் ெஹலன் ரூபி ஆகியோர் பேசினர். புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆதி நன்றி கூறினார்.

முதல் நாளில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் கண்காட்சியில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கி சென்றனர்.கண்காட்சி, ஐந்து நாட்கள் நடக்கிறது.

மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''40 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளில் உள்ள, 86 அரசு பள்ளிகள், 14 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரையும் புத்தக கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். வாகன வசதி செய்து கொடுத்துள்ளோம்.

96 பள்ளிகளில் இருந்து, 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாலை நேரங்களில் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது; குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.

சேமிப்பு... வாசிப்பு

மாணவ, மாணவியர், தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கு உண்டியல், பரிசாக வழங்கப்படுகிறது. சேமிப்பு தொகையை, அடுத்தாண்டு நடக்கும் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்க பயன்படுத்திக் கொள்கின்றனர். புத்தக கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட தபால் எழுதும் போட்டியில், 400 பேர் பங்கேற்றுள்ளனர். பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டியில், 150 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு, நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us