sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'

/

'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'

'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'

'லஞ்சப்பண விவகாரம் விசாரணை நடக்கிறது'


ADDED : மார் 01, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகாவில், லஞ்சப்பணம் காணாமல் போன விவகாரத்தை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க வேண்டுமென, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க தலைவர் கிருஷ்ணசாமி கொடுத்த மனு:

ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில், அலுவலர் ஒருவர் வாங்கிவைத்திருந்த 16 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் காணாமல் போன விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மாறாக, லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளான நபர், கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ., விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால், லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு விசாரணையை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை, உடனடியாக இடமாற்றம் செய்வது வழக்கம்; அதன்படி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us