sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

/

மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

மருத்துவ சிகிச்சைக்கு தொட்டில் பயணம் மலைவாழ் மக்களின் துயரம் என்று தீருமோ? மழைவாழ் மக்களின் துயரம் என்று தான் தீருமோ?

2


ADDED : செப் 01, 2024 01:52 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 6,500 பேர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் இருந்து, மூன்று நாட்களில், மூன்று பேரை மருத்துவ சிகிச்சைக்காக, தொட்டில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதைகளில் துாக்கி வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த, 29ம் தேதி, தைலப்புல் சேகரிக்க சென்றபோது, யானை தாக்கி படுகாயமடைந்த குருமலையைச் சேர்ந்த வெங்கிட்டான், 46.

நேற்று முன்தினம், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஈசல்திட்டு குடியிருப்பை சேர்ந்த சடையன் மனைவி பாப்பாள், 35, நேற்று மலைச்சரிவில் விழுந்து காயமடைந்த குருமலையை சேர்ந்த பச்சையப்பன், 45, ஆகிய மூவரையும், தொட்டில் கட்டி, 7 கி.மீ., துாரம் துாக்கி வந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மலைவாழ் மக்கள் கூறியதாவது:

திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. வனச்சூழல் பாதிக்காத வகையில், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வழித்தடத்தில் அமைக்கப்படும் இச்சாலையால், எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே போல், ஈசல் திட்டு குடியிருப்புக்கும் ரோடு அமைக்க அளவீடு செய்யப்பட்டது.

அரசு நிதி ஒதுக்கினாலும், வனத்துறையினர் தடுப்பதால் சிக்கல் நீடிக்கிறது. ரோடு வசதியில்லாததால், அவசர மருத்துவ வசதி மட்டுமன்றி, கல்வி, குடிநீர், ரேஷன் என, எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை.

உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், கர்ப்பிணியர், குழந்தைகள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு காயமடைவோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதற்கு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us