sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புற்று நோய் மையம் கட்டுமான பணி ஆய்வு

/

புற்று நோய் மையம் கட்டுமான பணி ஆய்வு

புற்று நோய் மையம் கட்டுமான பணி ஆய்வு

புற்று நோய் மையம் கட்டுமான பணி ஆய்வு


ADDED : ஜூலை 19, 2024 08:47 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனை வளாகத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த மையம், 'நமக்கு நாமே' திட்டத்தில், 90 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கருவிகளுடன் அமைகிறது. இதற்காக திருப்பூர் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை பெயரில் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால், கட்டுமானப் பணியை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். உதவி கமிஷனர் வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுதவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு செய்யும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் ராயபுரம் தீபம் பாலம் அருகே, நொய்யல் கரையில் கான்கிரீட் சாய்வு தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியையும், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us