sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்

/

அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்

அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்

அரசுப்பணி அசாத்தியம் அல்ல; அசத்தும் மகளிர்


ADDED : ஏப் 27, 2024 11:35 PM

Google News

ADDED : ஏப் 27, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசு வேலைக்கு இன்றைய இளைஞர்கள் பலர் ஆசைப்படுகின்றனர். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், போட்டி தேர்வில் சாதித்து உயர் அரசுப்பதவிகளையும் இளம் வயதிலேயே பெற முடியும். இதற்கு, திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண்கள் சாட்சியாக இருக்கின்றனர்.

விவசாயி மகள்

ஏற்கனவே, குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்து சுபாஷினி, குரூப் 1 தேர்வெழுதி, கூட்டுறவு துறையில் துணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார்.

''போட்டி தேர்வை எதிர்கொள்வதென்பது, சவாலான பணியல்ல; நான் விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண் தான்; பெற்றோர் விவசாயம் தான் பார்க்கின்றனர். நான் படிக்கவும், போட்டி தேர்வுக்கு தயாராகவும் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர். ஓராண்டு, கஷ்டப்பட்டு படித்தேன்; அரசுப்பணி சாத்தியமானது,'' என வெற்றியின் ரகசியம் சொன்னார் சுபாஷினி.

நம்பிக்கையே துணை

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வேளாண்மை அலுவலராக பணியாற்றி வரும் நித்யா 26, குரூப் 1 தேர்வெழுதி, சப்-கலெக்டராக பொறுப்பேற்க இருக்கிறார். ''கல்லுாரி படிக்கும் போதே அரசுப்பணி மீது ஆர்வம் இருந்தது; அப்போதில் இருந்தே போட்டி தேர்வுக்கு தயாராக துவங்கினேன்; ஒரு முறை தோற்றாலும், அடுத்த முறை வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்; போட்டி தேர்வு எளிதாகும். குடும்ப சூழலும் நம் முயற்சிக்கு சாதகமாக அமைய வேண்டும். ஒருமுறை போட்டி தேர்வை எதிர்கொண்டாலே தைரியம் வந்துவிடும்'' என நம்பிக்கை தருகிறார், நித்யா.

உழைப்பே உயர்வு

திருப்பூரில் பல் டாக்டராக பணியாற்றி வந்த தாரணி, 4 ஆண்டாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி, 4 முறை தேர்வெழுதி, நான்காவது முறை, தேர்ச்சி பெற்றிருக்கிறார். ''அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும்; அரசுப்பணி பெறுவதும் கடின உழைப்பின் வழியாக கிடைப்பது தான்; சில மாத கடின உழைப்பு; ஆயுள் முழுக்க நிம்மதி என்ற நம்பிக்கை வந்தாலே போதும்; அதற்கான முயற்சிக்கு உத்வேகம் கிடைக்கும்,'' என்றார் தாரணி.

பயிற்சியே பிரதானம்

உடுமலையை சேர்ந்த இந்திராபிரியதர்ஷினி, வேளாண்மை அலுவலராக பணிபுரிந்த நிலையில், குரூப் 1 தேர்வெழுதி, வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். ''போட்டி தேர்வுக்கு முழு ஈடுபாடுடன் தயாராக வேண்டும்; நிறைய பயிற்சி செய்ய வேண்டும்; வெற்றி கிடைக்கும்,'' என, ஒரே வரியில் தன்னம்பிக்கை தருகிறார்.--

18-ம் தேதி ரெகுலர் 11ம் பக்கம்

தாரணி

-----

26ம் தேதி 3ம் பக்க படங்கள்

நித்யா, சுபாஷினி, இந்திரா பிரியதர்ஷினி

'தியாக' மனநிலை; அர்ப்பணிப்பு உணர்வு

போட்டி தேர்வுகளில், பெண்களே அதிகளவில் சாதிக்கின்றனர்; அதற்கான காரணம் என்ன என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷிடம் கேட்டோம்; அவர் கூறியதாவது:கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியரிடம், போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். கல்லுாரி முடித்த பின், குடும்ப சூழ்நிலையால் தனியார் வேலைக்கு செல்லும் மாணவ, மாணவியர் ஏராளம்; அதற்கேற்ப, திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கிறது.பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள், எப்படியாவது அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என அதீத ஆர்வம் கொண்டவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, போட்டி தேர்வு எதிர்கொள்ள இலவசமாக பயிற்சி வழங்குகிறோம்; திருப்பூர் கலெக்டர் அலுவலகம், உடுமலைபேட்டையில் பயிற்சி வழங்கப்படுகிறது.பெண்கள் ஆர்வம்போட்டி தேர்வெழுதுவதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது, தேர்வெழுதுவோரில், 70 சதவீதம் பேர் பெண்களாக தான் இருக்கின்றனர்; 30 சதவீதம் தான் ஆண்கள். போட்டி தேர்வை எதிர்கொள்ள, குறைந்தது, ஓராண்டு காலத்துக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்க வேண்டும்; படிப்புக்காக அந்த காலகட்டத்தை தியாகம் செய்ய வேண்டும்; இந்த சூழலை பெண்கள் ஏற்று, அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்கின்றனர். ஆனால், ஆண்களிடம் அத்தகைய மனநிலை குறைவு.'இப்போதைக்கு வேலைக்கு செல்லலாம்; 2 வருடம் கழித்து அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்' என்ற மனநிலையை பல ஆண்களிடம் பார்க்க முடிகிறது.தனியார் நிறுவனங்கள்கடந்த நிதியாண்டில், 700 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளோம்; 50 பேர், பல்வேறு அரசு துறைகளில் இணைந்துள்ளனர். கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில், சிறப்பான பயிற்சி கட்டமைப்புடன் தனியார் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன; அவை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுவதால், பலரும் தனியார் பயிற்சி மையங்களுக்கு சென்றும் பயிற்சி பெறுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.----








      Dinamalar
      Follow us