sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது

/

தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது

தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது

தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது


ADDED : பிப் 26, 2025 11:31 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கோடை வெயிலை சமாளிக்க உதவும், தென்னந்தடுக்கு உற்பத்தியை நீண்ட இடைவெளிக்குப்பிறகு தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக தென்னந்தடுக்கு உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது.

அங்குள்ள தொழிலாளர்கள், சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில் மட்டைகளை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தடுக்கு பின்னுகின்றனர்.

வெயில் காலத்தில், பந்தல் அமைத்தல், குடிசை மேற்கூரை என பல்வேறு இடங்களில், இவ்வகை தென்னந்தடுக்குகள் பயன்பட்டு வருகின்றன.

இங்கு உற்பத்தியாகும் தடுக்குகள், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு, தனி நபர் ஒருவர், 100 தடுக்கு வீதம், 2,000 ஆயிரம் தடுக்குகள் வரை பின்னுகின்றனர். பின்னர் அவற்றை, 25 தடுக்குகள் கொண்ட கட்டுகளாக கட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ளதால், தடுக்கு உற்பத்தியை தீவிரப்படுத்த, கூடுதலாக தென்னை மட்டைகளை வாங்கி இருப்பு வைத்து, பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us