/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு
/
கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு
கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு
கோவை - ராஜஸ்தான் ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிப்பு
ADDED : ஆக 02, 2024 12:57 AM
திருப்பூர்:கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் இயக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் (எண்: 06181) இந்தாண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது; இரண்டு முறை நீட்டிப்பு செய்யப்பட்டது.
முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து, பயணிகள் எண்ணிக்கையும் கூடி வருவதால், ரயில் இயக்கம் செப்., 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆக., 1 முதல் செப்., 26 வரை வியாழன் தோறும் கோவையில் இருந்து, அதிகாலை, 2:30க்கு ரயில் புறப்பட்டு, சனிக்கிழமை (மூன்றாவது நாள்) காலை, 11:30 மணிக்கு பகத் கீ கோதி செல்லும். ஆக., 4ம் தேதி முதல், செப்., 29ம் தேதி வரை ஞாயிறுதோறும் பகக் கீ கோதியில் இருந்து இரவு, 7:30 மணிக்கு புறப்படும் ரயில், வியாழன் காலை, 9:30 மணிக்கு கோவை வந்தடையும்.
ரயிலில் 6 ஏ.சி., முதல் வகுப்பு படுக்கை வசதி, 12 முன்பதிவு படுக்கை வசதி, 3 பொது பெட்டிகள் இடம்பெறும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷன்களில் நின்று, வட மாநிலங்கள் வழியாக பயணிக்கும்.