sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேளாண் துறையில் பணி நியமனம்; அலுவலர்கள் மத்தியில் குழப்பம்

/

வேளாண் துறையில் பணி நியமனம்; அலுவலர்கள் மத்தியில் குழப்பம்

வேளாண் துறையில் பணி நியமனம்; அலுவலர்கள் மத்தியில் குழப்பம்

வேளாண் துறையில் பணி நியமனம்; அலுவலர்கள் மத்தியில் குழப்பம்


UPDATED : ஜூலை 03, 2024 02:56 AM

ADDED : ஜூலை 03, 2024 12:14 AM

Google News

UPDATED : ஜூலை 03, 2024 02:56 AM ADDED : ஜூலை 03, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;வேளாண் துறையை ஒருங்கிணைத்து, 'உழவர் தொடர்பு அலுவலர் 2.0' என்ற திட்டம் தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண் துறையில் காலியாக உள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பது, துறையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் செயல்படுகின்றனர். களப்பணியில் ஈடுபடும் இவர்களின் பணிச்சுமையை குறைக்கவும், அரசின் திட்டங்கள், முழு அளவில் விவசாயிகளை சென்றடையும் நோக்கில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' நடைமுறைக்கு வரும்' என, கடந்த மார்ச் மாதம் நடந்த வேளாண் பட்ஜெட்டில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சமீபத்தில், இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.

'இத்திட்டத்தின் படி, 3 முதல் 4 வருவாய் கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவர்; ஒருவர், 1,200 ஏக்கர் பரப்பளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்வார்' என, அறிவிக்கப்பட்டது. அத்துடன் வேளாண்மை, தோட்டக்கலை, மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும் எனவும் அரசு நம்பிக்கையளித்தது. ஆனால், இத்திட்டம் இதுவரை அமலுக்கு வரவில்லை.

இச்சூழலில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும், 48 வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது, வேளாண் துறையினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துறை அலுவலர்கள் கூறுகையில்,'உழவர் தொடர்பு அலுவலர் 2.0' திட்டம் அமலுக்கு வரும் போது, துறைகள் இணைக்கப்பட்டு, 'விரிவாக்க அலுவலர்' என்ற பணியிடம் தான் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி, தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. உழவர் தொடர்பு அலுவலர் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்பது, புரியாத புதிராக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us