/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 93.16க்கு விற்பனை
/
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 93.16க்கு விற்பனை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 93.16க்கு விற்பனை
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ. 93.16க்கு விற்பனை
ADDED : ஆக 09, 2024 02:51 AM

உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ ரூ. 93.16க்கு ஏலம் போனது. கொப்பரை விலை உயர்ந்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர்.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, உடுமலை, வேடபட்டி, விளாமரத்துப்பட்டி, ராவணாபுரம், போடிபட்டி, புக்குளம், பூளவாடி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 20 விவசாயிகள், 40 மூட்டை அளவுள்ள, 2 ஆயிரம் கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.91.69 முதல், ரூ. 93.16 வரையும், இரண்டாம் தரம், ரூ.65.69 முதல், 83.26 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் கொப்பரை ஏலத்தில், வாரம் தோறும் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. இதனால், கொப்பரை வரத்தும், விலையும் அதிகரித்து வருகிறது.
இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.