/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உச்சத்தை தொட்டது கொப்பரை விலை! கிலோ ரூ.150.67க்கு விற்பனை
/
உச்சத்தை தொட்டது கொப்பரை விலை! கிலோ ரூ.150.67க்கு விற்பனை
உச்சத்தை தொட்டது கொப்பரை விலை! கிலோ ரூ.150.67க்கு விற்பனை
உச்சத்தை தொட்டது கொப்பரை விலை! கிலோ ரூ.150.67க்கு விற்பனை
ADDED : மார் 06, 2025 09:46 PM

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, விளாமரத்துப்பட்டி, புக்குளம், தென் குமாரபாளையம், பூலாங்கிணர், போடிபட்டி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 35 விவசாயிகள், 85 மூட்டை அளவுள்ள, 4 ஆயிரத்து, 250 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 7 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.141.41 முதல், ரூ.150.67 வரையும், இரண்டாம் தரம், ரூ.120.20 முதல், 140.27 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் மற்றும் தேங்காய் சீசன் குறைவு காரணமாக, தென்னை மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. இதனால், கொப்பரை விலை தொடர்ந்து உயர்ந்து, நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச விலையை தொட்டுள்ளது.
கடந்தாண்டு, ஒரு கிலோ ரூ.100க்கு கீழ், விலை நிலவி வந்த நிலையில், முதல் முறையாக, ரூ.150.67 என்ற அளவில் விலை உயர்ந்து, விற்பனையானது. மேலும், இரண்டாம் தர கொப்பரை, ரூ.140.27 என, கூடுதல் விலைக்கு ஏலத்தில் இறுதி செய்யப்பட்டது.
அதிலும், சுற்றுப்புற பகுதிகளிலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களை விட, முதல் முறையாக உடுமலையில் கொப்பரை விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதே நிலை, மேலும் ஒரு ஆண்டு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தென்னை மரங்களில் காய்ப்பு சீசன் குறைந்துள்ளதால், கொப்பரை உற்பத்தி சரிந்துள்ளது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடக்கும் இ-நாம் திட்ட ஏலத்தில், தரம் காரணமாக, அதிகளவு வியாபாரிகள் பங்கேற்று வருகின்றன.
இதனால், கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து தாங்கள் உற்பத்தி செய்த கொப்பரையை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால், வாரம்தோறும் கொப்பரை வரத்து அதிகரித்து வருகிறது.
இ-நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.