/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் கவுன்சிலிங் துவங்கியது
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் கவுன்சிலிங் துவங்கியது
ADDED : ஜூன் 12, 2024 01:57 AM

திருப்பூர்;திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடந்த கவுன்சிலிங்கில் மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருப்பூர், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுரியியல், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தமுள்ள, 1,086 இடங்களுக்கு, 5,535 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொது கவுன்சிலிங் நேற்று முன்தினம் துவங்கியது.
முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. நேற்று முன்தினம் துவங்கி, பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.