sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்

/

கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்

கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்

கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் சிக்கண்ணா அணி சாம்பியன்


ADDED : ஜூலை 23, 2024 11:47 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், சிக்கண்ணா கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைகக்கல்லுாரி மைதானத்தில் கடந்த, 3 நாட்களாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி, பல்லடம் அரசு கலைக்கல்லுாரிகள், பார்க் கல்லுாரி, நிப்ட் டீ கல்லுாரி, கதிர் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், பல்லடம் அரசு கலைக்கல்லுாரி அணியும், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணியும் மோதின. முதலில் 'பேட்' செய்த, பல்லடம் அரசு கலைக்கல்லுாரி அணி, 20 ஓவர்களில், 77 ரன்கள் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி அணி, 13.5 ஓவரில், 2 விக்கெட் மட்டுமே இழந்து, 79 ரன்களை எடுத்து, அபார வெற்றி பெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் குழந்தைவேல், சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் மற்றும் பொருளியல் துறை தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டி, பரிசளித்தனர்.






      Dinamalar
      Follow us