sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

/

நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு

நல வாரியத்தில் ஆதரவற்ற பெண்கள் பதிவு செய்து கொள்ள அழைப்பு


ADDED : செப் 17, 2024 04:35 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஆதரவற்ற பெண்கள், நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியம் அமைத்துள்ளது.

ஆதரவற்றோர் நல வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து, https://tnsocialwelfare.tn.gov.in என்ற இணைய தள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரியத்திற்கென தனியே உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைய தள முகவரி வாயிலாக, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள், தங்களது விபரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து, நல வாரிய உறுப்பினர் ஆகலாம்.

இதில், உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளின் கீழ் பயன்பெறலாம், என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us