/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
/
பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED : ஆக 19, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.
கோவில் குண்டம் திருவிழா கடந்த முதல் தேதி, பத்ரகாளி அம்மனுக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

