sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெம்மான் விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்

/

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெம்மான் விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெம்மான் விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெம்மான் விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்


ADDED : செப் 13, 2024 03:39 AM

Google News

ADDED : செப் 13, 2024 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 72ம் ஆண்டு, ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை மூலநட்சத்திர நாளில் நடத்தப்படுகிறது. சிவபக்தியில் சிறந்திருந்த வந்தியம்மை மற்றும் பாண்டிய மன்னனுடன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை நினைவு கூரும் வகையில், இவ்விழா கொண்டாடப்படுகிறது.

நேற்று, மாலை, 6:00 மணிக்கு, நடராஜருக்கு அபிேஷக ஆராதனையும், இரவு, 7:00 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும், மகாதீபாராதனையும் நடந்தது.

வசந்த மண்டபத்தில், குளம் போல் வரப்பு அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டது. சிவாச்சாரியார் ஒருவர், பிட்டுக்கு மண் சுமந்த சிவனை போல் வேடமிட்டு, இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை போல், மண்வெட்டி, கூடையுடன் வந்து, மண் சுமந்தார்.

பிறகு, தரையில் படித்து உறங்குவது போல் படுத்திருந்த நபரை, பாண்டிய மன்னன் பிரம்பால் அடிக்கும் படலக்காட்சிகள் நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை பார்த்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us