/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி
/
குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி
குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி
குப்பை அள்ளாமல் சிரமம்... குடிநீர் கிடைக்காமல் அவதி
ADDED : செப் 03, 2024 11:46 PM

குப்பையால் சிரமம்
திருப்பூர், நெசவாளர் காலனி, ஜவகர் நகர், 3வது வீதியில் குப்பை அகற்றப்படாமல் ரோட்டில் கொட்டி வைத்துள்ளனர். பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
- ராஜன், நெசவாளர் காலனி.
அதிகாரிகள் மவுனம்
திருப்பூர், பெரிச்சிபாளையம், வினோபா நகரில் பிரதான தண்ணீர் குழாயும், பாதாள சாக்கடை குழாயும் ஒன்றாக இருக்கிறது. இதனால், பாதிப்பு ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்புசாமி, பி.கே.ஆர்., லே அவுட்.
குடிநீருக்கு அவதி
திருப்பூர், முதலிபாளையம், லட்சுமி நகர், அங்காளம்மன் நகர் ஆகிய பகுதிகளில், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
- அர்ஜூனன், முதலிபாளையம்.
அவல நிலையில் கழிப்பிடம்
பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது கழிப்பிடம் பாதுகாப்பற்ற நிலையில், சுகாதாரம் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது.
- மணி, பல்லடம்.
வீணாகி வரும் குடிநீர்
திருப்பூர், நடராஜ் தியேட்டர் ரோட்டரி மண்டபம் எதிரில், ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து, கடந்த, இரு நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.
- ரவிசந்திரன், திருப்பூர்.
ரியாக் ஷன்
நடைமேடை சீரமைப்பு
திருப்பூர், புஷ்பா மேம்பாலத்தில் உள்ள குமரன் காம்ப்ளக்ஸில் நடைபாதை சேதமடைந்து இருந்தது. இது குறித்து 'தினமலர்' செய்தியால், சரி செய்யப்பட்டது.
- குணசேகரன், திருப்பூர்.