sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்

/

காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்

காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்

காய்ந்த மேய்ச்சல் நிலம் :கால்நடை தீவனம் சிக்கல்


ADDED : ஏப் 27, 2024 12:49 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கடும் வெயில் காரணமாக, மேய்ச்சல் நிலம் தரிசாக மாறிவிட்டதால், கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், குளிர் பருவத்தில் பெய்ய வேண்டிய மழை, இந்தாண்டு பொழியவில்லை. கோடை பருவம் துவங்கி, இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும் மழையே இல்லை. கடைசியாக, வடகிழக்கு பருவத்தில் பெய்த மழைக்கு முளைத்த செடி, கொடிகள் காய்ந்து, மேய்ச்சல் நிலம் தரிசாக மாறிவிட்டது.

காய்ந்த நிலையில் உள்ள செடி, கொடிகளையும் ஆடு, மாடுகளும் தீவனமாக உட்கொள்ளும். இருப்பினும், சிலர் தீ வைத்து விடுவதால், மேய்ச்சல் நிலம் மழுவதும் எரிந்து சாம்பலாகியும் விடுகிறது. இத்தகைய காரணத்தால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் தீவன வசதியில்லாமல் போய்விட்டது.

கையிருப்பு உலர் தீவனமும் வேகமாக காலியாகி வருகிறது; வெயில் கடுமையாக இருப்பதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடிவதில்லை. கிராமப்புறத்தில் மேய்ச்சல் நிலமாக இருக்கும் மந்தை நிலங்களும் காய்ந்து போயுள்ளன. இனிமேல் தான் கத்திரி வெயில் துவங்கப்போகிறது.

இதன்காரணமாக, கால்நடைகளுக்கு, கடுமையான தீவன பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வறட்சி பாதித்த பகுதிகளை கண்டறிந்து, கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தேவை

விவசாயத்தை நம்ப முடியாது என்பதால், கால்நடை வளர்ப்பு மட்டுமே கிராமப்புற விவசாயிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. மழை குறைந்துவிட்டதால், இந்தாண்டு கால்நடை வளர்ப்பும் சவாலாக மாறியுள்ளது. மேய்ச்சல் வறண்டுவிட்டதால், கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; கால்நடைகளை பாதுகாக்க, இலவசமாகவோ அல்லது மானிய விலையிலேயோ, உலர் தீவனம் வழங்க வேண்டும். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விவசாயிகள்








      Dinamalar
      Follow us