sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!

/

இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!

இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!

இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!


ADDED : ஜூலை 24, 2024 11:57 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'திருப்பூரில் இந்த வாரம், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இந்த வாரம், திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 35 முதல், 36 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 20 முதல், 24 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

வரும் நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழையில்லா வறண்ட வானிலைக்கே வாய்ப்புள்ளது.

மக்காச்சோள பயிர் பாதுகாப்பு பொருத்தவரை, நடவு செய்து, 30 நாட்களான இறவை பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 125 கிலோ யூரியா மற்றும், 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை, களை எடுத்த பின், மேல் உரமாக இடலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us