sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!

/

'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!

'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!

'ஊட்டச்சத்து' உட் கொண்டால் ஆரோக்கியம் வசப்படும்!


ADDED : செப் 03, 2024 01:18 AM

Google News

ADDED : செப் 03, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;ஊட்டச்சத்து வார விழாவில், இரும்புச் சத்து நிறைந்த உணவு பதார்த்தங்களால் செய்யப்பட்டட விநாயகரை, அனைவரும் வியப்புடன் பார்த்து, விவரங்களை கேட்டறிந்தனர்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், இம்மாதம் முழுவதும் 'போஷன் மா' என்கிற பெயரில் தேசிய ஊட்டச்சத்து விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்க நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த பதாகைகள் ஏந்தியவாறு அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலமாக சென்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் அலுவலக வளாகம் முதல், தென்னம்பாளையம் வரை ஊர்வலம் சென்று திரும்பியது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், ஊட்டச்சத்து உணவு பொருட்களை தயாரித்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் வைத்திருந்தனர். பாகற்காய், அச்சு வெல்லம், சுண்டைக்காய், எள்ளு, பேரீச்சம்பழம், ராகியில் உருவான இரும்புச்சத்து விநாயகர், காய்கறி பொம்மை, சிறுதானியத்தாலான கும்பம், நடன மங்கை, யோகாசனம் என ஊட்டச்சத்துக்களை கலை நயத்தோடு காட்சிப்படுத்தியிருந்தனர்.

ராகி லட்டு, வரகு லட்டு, வரகு முறுக்கு என ஊட்டச்சத்து மிகுந்த உணவு பதார்த்தங்கள், அங்கன்வாடி மையம், பொது சுகாதாரம், கல்வியின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் அவசியம் குறித்த கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருந்தனர். அரசு அலுவலர்கள், பொதுமக்கள், கண்காட்சியை பார்வையிட்டனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) மகாலட்சுமி சங்கீதா, பெண்கள் ரோட்டரி தலைவர் கிருத்திகா உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மாவட்டத்திலுள்ள, 14 வட்டாரத்தில், மொத்தம் 1,472 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில் பயனாளியாக உள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, ஆண்டுதோறும் செப்., மாதம் ஊட்டச்சத்து மாதவிழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இம்மாதம் வரும், 30ம் தேதி வரை திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்களிலும், ஊட்டச்சத்து கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.

- கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டர்.








      Dinamalar
      Follow us