/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
/
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்
ADDED : மார் 28, 2024 10:51 PM
உடுமலை:உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வட மாநிலத்தினரும் அதிகமாக பணி புரிகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களையே பயன்படுத்துகின்றனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, தினமும் பலரும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். இங்கு தொழிற்சாலை, கம்பெனிகளில் பணிபுரியும் வட மாநிலத்தினரும், பாலக்காடு - சென்னை ரயிலை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள், இவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், ரயில்களில் அமர இடமின்றி பயணிக்க வேண்டியதுள்ளது.
எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

