ADDED : பிப் 25, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றான ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.
இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் வாகன ஓட்டுநர்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது.
குறிப்பாக, வாரச்சந்தையான திங்கட்கிழமைகளில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.