
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுருகன்பூண்டி அடுக்கு மாடிக்குடியிருப்பு பகுதியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
விழுதுகள் தன்னார்வ அமைப்பு, லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தின. திட்ட மேலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். சந்திரா தலைமை வகித்தார். லோட்டஸ் கண் மருத்துவமனை மருத்துவர் குழு முகாமை நடத்தியது. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுபரிசோதனை ஆகியன நடத்தப்பட்டது. துாய்மைப்பணியாளர்கள் 107 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

