/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு விவசாயிகள் ஆர்வம்
/
விளை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு விவசாயிகள் ஆர்வம்
விளை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு விவசாயிகள் ஆர்வம்
விளை நிலங்களில் மரக்கன்றுகள் நடவு விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 25, 2024 01:43 AM

உடுமலை;வனத்துக்குள் திருப்பூர் -10 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்களில் மண்ணின் மரபு சார்ந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு, 10வது திட்டமாக, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், விளை நிலங்களில், மரச்சாகுபடி திட்டமாகவும், பசுமை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், கடந்த, மூன்று வாரங்களில் உடுமலை பகுதிகளில், 28,930 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள சின்னவீரம்பட்டியில், மாணிக்கவடிவேல் - வைஜெயந்தி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், குறைந்த நீர்த்தேவையில், அதிகளவு வளரும் தன்மை கொண்ட, 3 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
அதே போல், மடத்துக்குளம், பெருமாள்புதுார் அப்சராஜிக்கு சொந்தமான நிலத்தில், மகா கனி, 500, குமிழ், தேக்கு, 200, சந்தனம், 75, நீர் மருது, 50, கருமருது, 50, மூங்கில், 180, தான்றி, நாவல், மந்தாரை, பலா ஆகிய மரக்கன்றுகள் தலா, 50 மற்றும் காற்றுத்தடுப்பானாக, வரப்பு ஓரங்களில், 750 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசு, கோவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், தொழில் நிறுவன வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.
முறையாக பராமரித்து, பசுமை வளர்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.