/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் திட்டம் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்
ADDED : மார் 02, 2025 11:44 PM
உடுமலை,; விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழக்கும் திட்டத்தின் கீழ், வரும் 30ம் தேதிக்குள் இ - சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை, ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையிலும் வகையில், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், தமிழகத்தில், வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பதிவு விபரங்களுடன், ஆதார் எண், மொபைல் எண், நில உடைமை விபரங்களையும் இணைக்கும் வகையில், வேளாண் துறை சார்பில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில், இ - சேவை மையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு விவசாயிகளிடம் நிலங்களின் விபரங்கள் இணைக்கப்பட்ட பின்னர், அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் உருவாக்கப்படும்.
வரும், 2025 - -26ம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித்திட்டம் (பி.எம்., கிஷான்), பயிர்க்காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் எளிதாக பயன் பெற, இந்த தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியமாகும்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்துறை சார்பில் நடத்தப்படும் முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச்சென்று, தங்கள் நில உடைமை விபரங்கள், ஆதார், மொபைல் எண் ஆகிய விபரங்களை அளித்து, எந்த வித கட்டணமும் இல்லாமல், வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: உடுமலை வட்டாரத்தில் நடந்து வரும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, 5 ஆயிரத்து, 268 விவசாயிகள் தங்கள் விபரங்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், ஒவ்வொரு கிராமங்களில் நடக்கும் சிறப்பு முகாம்கள் அல்லது இ-சேவை மையங்களில் இலவசமாகவும் உரிய ஆவணங்களை, இம்மாத இறுதிக்குள் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இனிமேல் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, தனித்துவ அடையாள எண் அவசியம் என்பதால், அனைத்து விவசாயிகளும், விபரங்களை சரிபார்த்து, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.