sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்

/

மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்

மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்

மணல் லாரிகள் சிறைப்பிடிப்பு: விவசாய சங்கத்தினர் ஆவேசம்


ADDED : மே 10, 2024 11:50 PM

Google News

ADDED : மே 10, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;மண், மணல், எம்சாண்ட் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், பல வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

இதனால், வாகனத்திற்கு பின்னால் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பொங்கலுார் - அவிநாசிபாளையம் அருகே, பாதுகாப்பற்ற முறையில் எம்-சாண்ட் ஏற்றிச் சென்ற லாரியை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சிறை பிடித்து அவிநாசிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உரிய பாதுகாப்புடன் செல்லுமாறு, போலீசார் எச்சரித்து லாரியை அனுப்பினர். விவசாயிகள் கூறுகையில், 'மண், மணல் ஏற்றி செல்லும் லாரிகள், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us