நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று காலை துவங்கிய இந்த ஆய்வு பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சேவைகள் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது.
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். ஆய்வின் போது பல்வேறு அரசுத் துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.